பதிவு செய்த நாள்
31 அக்2014
06:23
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப் பருவத்தில் (அக்.,–செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக உயரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்க்கரை உற்பத்தியுடன் (2.45 கோடி டன்) ஒப்பிடுகையில், 5 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா), நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2.50–2.55 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.அக்டோபர் துவக்கத்தில் சர்க்கரை கையிருப்பு, 69.20 லட்சம் டன்னாக இருந்தது என, மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கச்சா சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு, ஊக்கத் தொகை வழங்கியதை அடுத்து, கடந்த, 2013–14ம் சந்தைப் பருவத்தில், சர்க்கரை ஏற்றுமதி, 22 லட்சம் டன்னாக இருந்தது.கச்சா சர்க்கரைக்கான ஏற்றுமதி மானியத்தை, நடப்பு பருவத்திலும் தொடர வேண்டும் என, இத்துறை நிறுவனங்கள் கேட்டு கொண்டுள்ளன.மகராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|