பதிவு செய்த நாள்
31 அக்2014
06:24
நாமக்கல்: வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணங்களால், வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கொள்முதல் செய்யப்படும் கோழித்தீவன மூலப்பொருட்களின் சப்ளை குறைந்து விட்டது.அதனால், உள்ளூர் மார்க்கெட் மற்றும் இருப்பை அடிப்படையாக கொண்டு, கடந்த சில நாட்களில், தீவனத்தின் விலை, 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் செயல்படும் முட்டை மற்றும் கறிக்கோழிப் பண்ணைகளுக்கு தேவையான, சோயா புண்ணாக்கு, கடுகு புண்ணாக்கு ஆகியவவை, 100 சதவீதம், மத்தியபிரதேசம், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தே பெறப்படுகிறது.இந்நிலையில், அங்கிருந்து வரத்து குறைந்ததால், 2,610 ரூபாயாக இருந்த 100 கிலோ சோயா புண்ணாக்கு, நேற்று, 2,760 ரூபாயாக திகரித்தது.அதேபோல், கடலை புண்ணாக்கு, 2,100லிருந்து, 2,220, கடுகு புண்ணாக்கு, 1,310லிருந்து, 1,370, மக்காச்சோளம், 1,200லிருந்து, 1,270, சூரியகாந்தி புண்ணாக்கு, 1,700லிருந்து, 1,760 ரூபாயாக அதிகரித்துள்ளன. இதனால், உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|