பதிவு செய்த நாள்
11 நவ2014
05:03
புதுடில்லி: பொதுவாக, பண்டிகை காலங்களில் கார் விற்பனை அதிகரிப்பது வழக்கம். ஆனால், தொடர்ந்து இரண்டாவது மாதமாக சென்ற அக்டோபரிலும், கார் விற்பனை, 2.55 சதவீதம் சரிவடைந்து, 1.59 லட்சமாக குறைந்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், கார் விற்பனை, 1.63 லட்சமாக இருந்தது என, இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.இது குறித்து சியாம் உதவி இயக்குனர் ஜெனரல் சுகாட்டோ சென் கூறியதாவது:நடப்பாண்டில், எஞ்சியுள்ள இரண்டு மாதங்களிலும், வாகன விற்பனை சுணக்கமாகவே இருக்கும். அடுத்தாண்டு துவக்கம் முதல் கார் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்புள்ளது.இருப்பினும், நடப்பு நிதியாண்டில், பயணிகளுக்கான வாகனம் மற்றும் கார் விற்பனை வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.கார் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக திகழும், ஆப்ரிக்கா, இலங்கை மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில், பல்வேறு ஒழுங்குமுறை பிரச்னைகளால் ஏற்றுமதி குறைந்துள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு கண்பதோடு, புதிய சந்தைகளில் கால் பதிக்க மத்திய அரசு உதவிடும் வகையில் விரிவான அறிக்கை, வர்த்தக அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.சென்ற அக்டோபரில், கார் விற்பனை மட்டுமின்றி, ஒட்டு மொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனையும், 3.61 சதவீதம் சரிவடைந்து, 14.62 லட்சமாக குறைந்துள்ளது.இதே போன்று, வர்த்தக வாகனங்கள் விற்பனையும், 2.97 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 59,165 ஆக சரிவடைந்துஉள்ளது.அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் விற்பனையும், சென்ற அக்டோபரில், 3.84 சதவீதம் குறைந்து, 18.58 லட்சத்திலிருந்து, 17.87 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது என, சியாம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|