பதிவு செய்த நாள்
18 நவ2014
23:57
புதுடில்லி:இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு 2014–15ம் பருவத்தில் (அக்.,–செப்.,) இதுவரையில், 22 சதவீதம் அதிகரித்து, 5.6 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 4.62 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக இருக்கும் தெரிவித்துள்ள நிலையில், ‘இஸ்மா’ இதன் உற்பத்தி, 2.50–2.55 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பீடு செய்துள்ளது.கடந்த 2013–14ம் பருவத்தில், இதன் உற்பத்தி, 2.44 கோடி டன்னாக இருந்தது.
நடப்பாண்டில், உள்நாட்டில் சர்க்கரைக்கான தேவை, 2.47 கோடி டன்னாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.நடப்பு பருவத்திற்கான சர்க்கரை உற்பத்தி தற்போது தான் துவங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில், இதன் உற்பத்தி விறுவிறுப்படைய துவங்கியுள்ளது. அதேசமயம், உத்தரபிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள், இம்மாத இறுதி வாக்கில் உற்பத்தியை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மாநில அரசு, கரும்பிற்கான விலையை உயர்த்தாதது மற்றும் வரி சலுகைகளை அறிவிக்காததால், உற்பத்தியில் ஈடுபடப் போவதில்லை என, உத்தரபிரதேச சர்க்கரை ஆலைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.நடப்பு பருவத்தில், உபரி சர்க்கரை கையிருப்பு, 20 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2013–14ம் பருவத்தில், இந்தியா 21.17 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|