பதிவு செய்த நாள்
20 நவ2014
00:14
சென்னை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ‘சென்ட் ஹோம் டபுள் பிளஸ்’ மற்றும் ‘சென்ட் ஆஸ்பயர் டிபாசிட்’ என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி,வாடிக்கையாளர்களுக்கு, வீட்டு கடன் திட்டத்தில், மிகைப்பற்று வசதியை (ஓவர் டிராப்ட்) ஏற்படுத்தி தரும் வகையில், சென்ட் ஹோம் டபுள் பிளஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்புதிய திட்டத்தின்படி, வீட்டு கடன் வாங்கியவர்கள், மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணையை (இ.எம்.ஐ.,) விட, கூடுதலான தொகையை வங்கியில் செலுத்தலாம்.
கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை, அவசர செலவுகளுக்கு தேவைப்படும் போது, வாடிக்கையாளர்கள் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம், வீட்டு கடன் வட்டியை சேமிக்க முடியும். இதே போன்று, திருமணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளும் வகையில், வீட்டு கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைந்த வட்டியில் பெறலாம்.
சென்ட் ஆஸ்பயர் டிபாசிட் திட்டத்தின் கீழ், குறித்த கால வைப்பு நிதிக்கு ஏற்றாற் போல, வாடிக்கையாளர்களுக்கு, வருமான சான்றிதழ் இன்றி, கிரெடிட் கார்டு வழங்கப்படும். இது, அவர்களின், உடனடி பணத் தேவைகளை நிறைவேற்றும். கிரெடிட் கார்டு கடனை திரும்ப செலுத்தும் கால அளவான, 55 நாட்களுக்கு பின், மிக குறைந்த அளவாக, மாதத்திற்கு, 1.20 சதவீத வட்டியே வசூலிக்கப்படும் என, இவ்வங்கி தெரிவித்துள்ளது
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|