பதிவு செய்த நாள்
20 நவ2014
00:16
திருப்பூர்: டியூட்டி டிராபேக்’ எனப்படும், வரியினங்களை திரும்ப வழங்குதல் புதிய திட்டம், வரும் 22ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வருவதால், திருப்பூர் பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்றுமதி நிறுவனங்கள் ஆடை உற்பத்திக்கான உபகரணங்களை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.அப்படி வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு, சுங்கம், கலால் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஏற்றுமதியை ஊக்குவிக்க, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்தும் வரியினங்களை, ‘டியூட்டி டிராபேக்’ (வரியினங்களை திரும்ப வழங்குதல்) என்ற பெயரில், மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது.
வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்தபின், பயன்படுத்திய மூலப்பொருட்கள் விவரம், ஆடைகளின் மொத்த மதிப்பு, மூலப்பொருட்கள் கொள்முதல் விவரங்களை சுங்க வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஆடைகள் மதிப்பில், குறிப்பிட்ட சதவீத வரி திரும்ப வழங்கப்படும்.
இரண்டு மாதத்துக்கு முன், திருப்பூர் வந்த ‘டியூட்டி டிராபேக்’ குழு, தொழில் துறையினரிடம் கருத்து கேட்டபோது, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல், துணை தலைவர் சந்திரன் ஆகியோர், ‘தொழில் துறை வளர்சிக்காக, புதிய ‘டியூட்டி டிராபேக்’ திட்டத்தை அறிவிக்க கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, மத்திய நிதித்துறை அமைச்சகம் புதிய ‘டியூட்டி டிராபேக்’ திட்டம், வரும் 22ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவித்துள்ளது.இதில், பருத்தி நுாலிழை ஆடைகளுக்கு, 7.5 சதவீதம்; விஸ்கோஸ் இழை ஆடைகளுக்கு, 9.5 சதவீதம்; செயற்கை இழை ஆடைகளுக்கு, 9.8 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பிற்கு, பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|