பதிவு செய்த நாள்
24 நவ2014
16:57
மும்பை : தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. நிப்டி முதன்முறையாக 8500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. அதேப்போல் சென்செக்ஸூம் புதிய உச்சத்தை தொட்டது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் தொழில்தொடர்பாக பல முக்கிய மசோதாக்கள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பாலும், அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் பங்குகளை வாங்கி வருவதாலும் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. மேலும் சீனா வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருப்பதும், ஐரோப்பிய வங்கி சில முக்கிய முடிவுகளை எடுத்து வருவதும் பங்குசந்தைகள் உயர காரணமாக அமைந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 164.91 புள்ளிகள் உயர்ந்து 28,499.54-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 52.80 புள்ளிகள் உயர்ந்து 8,534.65-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக ஐசிஐசிஐ., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், எச்டிஎப்சி., ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்.பி.ஐ., டாடா பவர், டிசிஎஸ்., மற்றும் விப்ரோ நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|