பதிவு செய்த நாள்
25 நவ2014
17:08
மும்பை : கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(நவ.25ம் தேதி) சரிவை சந்தித்தன. பங்குசந்தைகள் தொடர்ந்து உச்சம் பெற்று வந்ததால் பங்குகளின் விலை அதிக ஏற்றத்துடன் இருந்தன. இதன்காரணமாக முதலீட்டாளர் லாபம்நோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 161.49 புள்ளிகள் சரிந்து 28,338.05-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 67.05 புள்ளிகள் சரிந்து 8,463.10-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தக துவக்கத்தில், நிப்டி 8,535.35 எனும் புதிய உச்சத்தை தொட்டது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் சரிந்தும், 15 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ., என்டிபிசி., எல்அண்ட்டி., டாடா பவர், மாருதி சுசூகி, ஆக்சிஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எஸ்பிஐ., டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|