பதிவு செய்த நாள்
16 டிச2014
01:20
புதுடில்லி;இந்தாண்டு, 500 இந்திய நிறுவனங்களில், அதிக அளவில் வருவாய் ஈட்டிய வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம், முதலிடத்தில் உள்ளதாக, 'பார்ச்சூன்' இதழ் தெரிவித்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பார்ச்சூன் இதழின் இந்திய பதிப்பு, 500 சிறந்த நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது.அதில், பொதுத் துறையை சேர்ந்த ஐ.ஓ.சி., 5,00,973 கோடி ரூபாய் ஆண்டு வருவாயுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்., இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்., நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.இவை, கடந்த ஆண்டை போன்றே, இந்தாண்டு பட்டியலிலும் அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் ஆண்டு வருவாய், 9.5 சதவீதமும், லாபம், 4.5 சதவீதமும் உயர்ந்துள்ளது.மொத்த வருவாயில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு, 38 சதவீதமாகவும், வளர்ச்சி, 6.6 சதவீதமாகவும் உள்ளது. இது, தனியார் நிறுவனங்களில், முறையே, 56.7 சதவீதம் மற்றும் 10.2 சதவீதமாகவும்; அன்னிய நிறுவனங்களில், முறையே, 5.3 சதவீதம் மற்றும் 25.5 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|