பதிவு செய்த நாள்
16 டிச2014
01:21
புதுடில்லி:வரி பிரச்னை மற்றும் பிற நடவடிக்கைகள் (மைக்ரோசாப்ட் கையகப்படுத்தியது) காரணமாகவே, தமிழகத்தில் உள்ள நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது என, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, லோக்சபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:நோக்கியா மூடப்பட்டதால், 6,600 பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தாண்டு, 89 நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், 119.95 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 11,67,987 மனித உழைப்பு நாட்கள் வீணாகி உள்ளன.16 தொழிற்சாலைகளின் கதவடைப்பால், 14.95 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 6,20,626 மனித உழைப்பு நாட்கள் பயனற்று போயின.நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு, அரசு சுமூக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|