பதிவு செய்த நாள்
02 ஜன2015
16:27
திருப்பூர்: அமெரிக்க நிறுவனத்துக்கு அனுப்ப, திருப்பூர் நிப்-ட்டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரி குழுவினர், 120 டிசைன்களை உருவாக்கியுள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், சுயமாக டிசைன் உருவாக்குவதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். திருப்பூரில் உருவாக்கப்படும் டிசைன்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு, அமெரிக்காவில் இயங்கும், 'லீ ஸ்டுடியோ' என்ற நிறுவனம், அமெரிக்க, 'பையர்'களுக்காக டிசைன் உருவாக்குகிறது.
இந்நிறுவனம், பின்னலாடை நகரான திருப்பூருக்கு, புதிய டிசைன்களை உருவாக்குவதற்கான, முதல் வாய்ப்பை வழங்கியது. 'மலர்' என்ற கருத்து அடிப்படையில், திருமணத்துக்கு ஆடைகளில் பிரின்டிங் செய்வதற்கான, டிசைன்களை உருவாக்க, நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரிக்கு, குறுஞ்செய்தி அனுப்பியது; டிசைன்களைஉருவாக்கி, ஜன., 8க்குள் அனுப்ப காலக்கெடு விதிக்கப்பட்டது.
குறித்த காலத்துக்குள் டிசைன் உருவாக்குவதற்காக, நிப்ட்-டீ கல்லுாரி தலைமை டிசைனர்கள் மூன்று பேர், 30 மாணவ டிசைனர்கள் களமிறங்கினர். அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற மலர்கள், இயற்கை சூழல் சார்ந்த புகைப்படங்களை சேகரித்து, முதல்கட்டமாக, 'மூட்போர்டு' தயாரித்து, அதிலிருந்து, டிசைன் உருவாக்கியுள்ளனர். மொத்தம் 120 டிசைன்கள் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்ப தயார் செய்யப்பட்டுள்ளது.
நிப்ட்-டீ கல்லூரி தலைவர் (அகாடமி மேம்பாட்டு கமிட்டி) சீனிவாசன் கூறியதாவது: கல்லூரியின் தலைமை டிசைனர்கள், மாணவ டிசைனர்கள் இணைந்து, குறித்த காலத்துக்கு முன்னரே டிசைன்களை உருவாக்கி விட்டனர். டிசைன்களை வீடியோ காட்சியாக பதிவு செய்து, வரும் 5ம் தேதி அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.இந்த டிசைன்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது, அந்நிறுவனத்திடம் இருந்து, மேலும் பல புதிய டிசைன் உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருப்பூரில், 'டிசைனர் ஸ்டுடியோ' அமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|