பதிவு செய்த நாள்
22 ஜன2015
10:22
மும்பை : இந்திய பங்குசந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது, உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் முக்கிய நிறுவன பங்குகளின் 3வது காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் அந்த நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவு வாங்க தொடங்கியுள்ளனர். மேலும் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|