பதிவு செய்த நாள்
04 பிப்2015
14:53
இந்தியாவில், ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், சாம்சங்கை பின்னுக்கு தள்ளி, இந்திய நிறுவனமான மைக்ரோமாக்ஸ் நிறுவனம், முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
மனிதனின் ஆறாவது புலனுறுப்பாக மொபைல்போனை சொல்லலாம் என்ற அளவிற்கு, மொபைல்போன்களின் பயன்பாடு, மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், மொபைல்போன் பயன்பாடு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக, தற்போது அனைவரின் கைகளிலும், ஸ்மார்ட்போன் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வர்த்தகத்தில், சர்வதேச நிறுவனமான சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்திய நிறுவனமான மைக்ரோமாக்ஸ் நிறுவனம், முன்னணி இடத்தை பிடித்துள்ளதாக கேனலிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேனலிஸ் நிறுவனம், 2014ம் ஆண்டு அக்டோபர் - டிசம்பர் மாதங்களில், இந்தியாவில், விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில், 22 சதவீத பங்கை, மைக்ரோமாக்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. அதற்கடுத்த இடத்தில், சாம்சங் நிறுவனம் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முன்னணியில், மைக்ரோமாக்ஸ், அதற்கடுத்த இடங்களில், சாம்சங், கார்பான் மற்றும் லாவா நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் நைட்ரோ மற்றும் கேன்வாஸ் ஹியூ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களே, விற்பனையில் முன்னிலை பெற காரணமாக அமைந்ததிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|