பதிவு செய்த நாள்
05 பிப்2015
10:21
மும்பை : வாரத்தின் 5ம் நாளான இன்று(பிப்ரவரி 5) காலை நேர வர்த்தகத்தின் போது இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கமான சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 58 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்துள்ளன. வர்த்தக நேர துவக்கத்தின் போது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 58.23 புள்ளிகள் சரிந்து 28,824.88 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 18.65 புள்ளிகள் குறைந்து 8705.05 புள்ளிகளாகவும் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு, சரக்கு ஏற்றுமதி, ஆயுள் காப்பீடு, கட்டுமானம் ஆகிய துறைகளில் பங்குகள் அதிக அளவில் ஏற்றம் கண்டதால் பங்குச் சந்தையில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆசிய பங்குச் சந்தையை பொருத்தவரை, ஹாங்காங் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனும், ஜப்பான் பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தைகள் 0.04 சதவீதம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|