தங்கம் விலை ரூ.40 அதிகரிப்புதங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ...
ரயில்வே பட்ஜெட் தாக்கல் – ரயில் கட்டணம் உயர்வில்லை! அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
14:02

புதுடில்லி : 2015–16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. புதிய ரயில் திட்டங்களுக்கான பெரிய அறிவிப்புகள் இல்லையென்றாலும் ரயில்வே துறையை மேம்படுத்த பல திட்டங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே தரம் பின் தங்கியுள்ளது
ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில், கடந்தகாலங்களில் ரயில்வே துறைக்கான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் ரயில்வே துறையின் தரம் பின்தங்கியுள்ளது. முதலீடு குறைவால் ரயில்வே துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் ரயில்வே துறையின் பங்கு முக்கியமானது. அதிக முதலீடு செய்தால் ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெருகும் என்றார்.
138 – 24 மணிநேர உதவி மையம்
24 மணிநேரம் செயல்படும் குறைதீர் மையங்கள் செயல்படுத்தப்படும். இதற்கான இலவச அழைப்பு எண் 138. மேலும் பாதுகாப்பு தொடர்பான புகாருக்கு 182 என்ற இலவச எண் அறிமுகம்.
5 நிமிடத்தில் டிக்கெட் – ஆபரேஷன் 5 நிமிடம்
முன்பதிவு இல்லாமல் டிக்கெட் பெறுபவர்களுக்கு 5 நிமிடத்தில் டிக்கெட் கிடைக்கும் படி செய்ய ஆபரேஷன் 5 நிமிடம் என்ற பெயரில் புதிய திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இதனை பெற ஏற்பாடு.
ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு
ரயில்வே துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8.50 லட்சம் கோடி முதலீடு செய்ய வழிவகை செய்யப்படும்.

2015–16–ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்....
* பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை
* அகல ரயில்பாதை மற்றும் மின்ரயில் பாதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே தரத்தை மேம்படுத்த முக்கியத்துவம்.
* குறிப்பிட்ட 109 ரயில்களில் மின்னணு மூலம் உணவு பெறும் வசதி.
* ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு
* 1200 கி.மீ புதிய ரயில் பாதை.
* ஆளில்லா ரயில்வே கேட்டை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை
* 4 பங்கலைக்கழங்களில் ரயில்வே ஆராய்ச்சி மையம்.
* 400 ரயில்நிலையங்களில் வை–ஃபை வசதி.
* எரிபொருள் செலவை குறைக்க, குறைந்த எடையிலான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
* ரயில்களில் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
* சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் மற்றும் பஸ்களுக்கு ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் முறை
* 17000 கழிவறைகளை பையோ–டாய்லட்டாக மாற்ற நடவடிக்கை
* லெவல் கிராசிங் பாதுகாப்பிற்கு ரூ.6,581 கோடி நிதி ஒதுக்கீடு
* ரயில்வே பராமரிப்புக்கு தனியாருடன் இணைந்து செயல்பட புதிய திட்டம்.
* ரயில் வருகையை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் வசதி.
* பெண்கள் பாதுகாப்பிற்காக ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு.
* குறிப்பிட்ட சில ரயில்களில் சாதாரண ரயில்பெட்டிகள் கூடுதலாக இணைக்க முடிவு.
* 9420 கி.மீ ரயில் பாதைக்கு ரூ.96,182 கோடி ஒதுக்கீடு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)