பதிவு செய்த நாள்
26 பிப்2015
17:27
மும்பை : மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்தளவுக்கு புதிய திட்டங்கள் இல்லாததால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றத்தை தந்ததால் வர்த்தகம் சரிந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்தது பங்குசந்தை. மேலும் சென்செக்ஸூம் 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 261.34 புள்ளிகள் சரிந்து 28,746.55–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 83.40 புள்ளிகள் சரிந்து 8,683.85–ஆகவும் முடிந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் சரிந்தும், 5 நிறுவன பங்குகள் உயர்ந்தும், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
ரயில்வே சரக்கு கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்பட்டதால் சிமெண்ட், நிலக்கரி மற்றும் உலோகம் தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் டெக்ஸ்மோ ரயில்(–2.51 சதவீதம்), ரயில் நிர்மான் (–4.05 சதவீதம்), ஸ்டோன் இந்தியா (–7.01 சதவீதம்) பிஇஎம்எல் (–1.65 சதவீதம்) சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|