ஹோண்டா கொண்டு வரும் பெரிய ஸ்கூட்டர்ஹோண்டா கொண்டு வரும் பெரிய ஸ்கூட்டர் ... அமெரிக்காவை வீழ்த்திய திருவொற்றியூர்! அமெரிக்காவை வீழ்த்திய திருவொற்றியூர்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இருசக்கர வாகனங்களில் இனி ஏ.பி.எஸ்., வசதி கட்டாயம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2015
12:13

இந்தியாவில், சாலை விபத்துக்களும், உயிர் பலிகளும், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், இருசக்கர வாகனங்கள் தான் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில், ‘ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் – ஏ.பி.எஸ்.,’ என்ற வசதி இடம் பெற்று இருக்கும். இந்த வசதி, திடீரென பிரேக் போடும் போது, நான்கு சக்கர வாகனம் சாலையிலிருந்து வழுக்கி கொண்டு செல்வதை தடுக்கும். இதன் மூலம், விபத்தை தவிர்க்க முடியும்.
இதே போன்று, இருசக்கர வாகனங்களிலும், ஏ.பி.எஸ்., வசதி இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் இது குறித்து கேட்ட போது, 125 சிசி திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு, ஏ.பி.எஸ்., வசதியை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
ஏ.பி.எஸ்., வசதி செயல்படுவது எப்படி?
வாகனங்களில், பிரேக் போடும் போது, அனைத்து சக்கரங்களுக்கும் சீராக அதன் அழுத்தம் போய் சேராது. இதன் காரணமாக, ஒரு சக்கரம் வேகமாகவும், ஒரு சக்கரம் மெதுவாகவும் சுழல துவங்கும். ஒரு கட்டத்தில், சக்கரத்தின் சுழற்சி நின்று விட, நேர் பாதையில் இருந்து வாகனம் வழுக்கி கொண்டு போகும். அந்த வாகனத்தில் ஏ.பி.எஸ்., வசதி இடம் பெற்று இருந்தால், பிரேக் போடும் போது, அனைத்து சக்கரங்களுக்கும் நேரடியாக அதன் அழுத்தம் போகாது. ஏ.பி.எஸ்., கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலம், சக்கரங்களின் சுழற்சி தனித்தனியாக அளவீடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இதில் ஒரு சக்கரத்திற்கு கூடுதல் பிரேக் அழுத்தம் செல்வதை தெரிந்தால், அதை சீராக்க, முயற்சி எடுக்கப்படும். இப்படி தான், ஏ.பி.எஸ்., வசதி செயல்படுகிறது.
இருசக்கர வாகனங்களுக்கு, ஏ.பி.எஸ்., வசதி புதிதல்ல. கடந்த, 1988ல், பி.எம்.டபிள்யூ., நிறுவனம், தனது கே100 மோட்டார் சைக்கிளில், இந்த வசதியை அறிமுகப்படுத்தியது.ஹோண்டா நிறுவனம், 1992ல், எஸ்டி100 மோட்டார் சைக்கிளில் இந்த வசதியை ஏற்படுத்தியது.
கடந்த, 2007ல், சுசூகி நிறுவனம், ஏ.பி.எஸ்., வசதியுடன் கூடிய, ஜிஎஸ்எப் 1200எஸ்ஏ(பன்டிட்) மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய துவங்கியது. ஹார்லி டேவிட்சன் நிறுவனம், 2005ல், போலீஸ் துறைக்கு அளிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், இந்த வசதியை ஏற்படுத்தியது. பின்னர், பிற மாடல் மோட்டார் சைக்கிள்களிலும், செயல்படுத்தியது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)