தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய இருசக்கர வாகனத்தில் என்ன பிரச்னை வரும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2015
15:19

புதிதாக, இருசக்கர வாகனம் வாங்குபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இன்ஜின், உதிரி பாகங்கள் சரியாக பொருத்தப்படாதது, விளக்கு மற்றும் எலக்ட்ரிக்கல் பிரச்னை, பிரேக் பிரச்னை குறித்துதான் ஏராளமான புகார்கள் வந்தன.
ஜெ.டி.பவர் என்ற நிறுவனம்தான், இந்த ஆய்வை நடத்தியது. இன்ஜின், பிரேக், விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரச்னை, உதிரி பாகங்கள் சரியாக பொருத்தப்படாதது, வாகனத்தை இயக்குதல் மற்றும் கையாளுதல், கியர் உள்ளிட்ட ஏழு தலைப்புகளின் கீழ், 139 பிரச்னைகள் குறித்து, கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு, ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என இரண்டு வகையான இருசக்கர வாகனங்கள் உட்படுத்தப்பட்டன. ஸ்கூட்டர் வகையில், விலை குறைந்தது, விலை அதிகமானது என இரண்டு பிரிவுகளிலும், மோட்டார் சைக்கிள் வகையில், ஐந்து பிரிவுகளிலும், அதன் உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
புதிய வாகனம் வாங்கிய இரண்டு மாதங்களில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது தான், முக்கிய கேள்வியாக அமைந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வாகன உரிமையாளர்களில், 80 சதவீதம் பேர், தினமும் வாகனத்தை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக, தினமும், 40 கி.மீ., தூரத்திற்கு, இருசக்கர வாகனத்தில், பயணிப்பவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களில், 27 சதவீதம் பேர், மைலேஜ் பிரச்னைக்காகதான், புதிய வாகனத்தை வாங்கியதாக தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் தேவையை வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆய்வு எடுத்து கூறும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)