பதிவு செய்த நாள்
12 மார்2015
15:19
புதிதாக, இருசக்கர வாகனம் வாங்குபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இன்ஜின், உதிரி பாகங்கள் சரியாக பொருத்தப்படாதது, விளக்கு மற்றும் எலக்ட்ரிக்கல் பிரச்னை, பிரேக் பிரச்னை குறித்துதான் ஏராளமான புகார்கள் வந்தன.
ஜெ.டி.பவர் என்ற நிறுவனம்தான், இந்த ஆய்வை நடத்தியது. இன்ஜின், பிரேக், விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரச்னை, உதிரி பாகங்கள் சரியாக பொருத்தப்படாதது, வாகனத்தை இயக்குதல் மற்றும் கையாளுதல், கியர் உள்ளிட்ட ஏழு தலைப்புகளின் கீழ், 139 பிரச்னைகள் குறித்து, கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வுக்கு, ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என இரண்டு வகையான இருசக்கர வாகனங்கள் உட்படுத்தப்பட்டன. ஸ்கூட்டர் வகையில், விலை குறைந்தது, விலை அதிகமானது என இரண்டு பிரிவுகளிலும், மோட்டார் சைக்கிள் வகையில், ஐந்து பிரிவுகளிலும், அதன் உரிமையாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
புதிய வாகனம் வாங்கிய இரண்டு மாதங்களில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது தான், முக்கிய கேள்வியாக அமைந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வாகன உரிமையாளர்களில், 80 சதவீதம் பேர், தினமும் வாகனத்தை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். குறிப்பாக, தினமும், 40 கி.மீ., தூரத்திற்கு, இருசக்கர வாகனத்தில், பயணிப்பவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களில், 27 சதவீதம் பேர், மைலேஜ் பிரச்னைக்காகதான், புதிய வாகனத்தை வாங்கியதாக தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் தேவையை வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆய்வு எடுத்து கூறும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|