தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 271 புள்ளிகள் எழுச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2015
17:30

மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக மந்தமாகவும், சரிவுடனும் காணப்பட்ட நிலையில் இன்று(மார்ச் 12ம் தேதி) அதிக எழுச்சி கண்டன. பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தியின் மீதான எதிர்பார்ப்பாலும், நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் அளவு இருக்கும் என பன்னாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாலும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதா... உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கி குவித்ததால் இன்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 271.24 புள்ளிகள் உயர்ந்து 28,930.41–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 76.05 புள்ளிகள் உயர்ந்து 8,776–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 24 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக ஸ்டெர்லைட், என்டிபிசி., ஹண்டால்கோ, சன்பார்மா, பெல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி., ஐசிஐசிஐ., பார்த்தி ஏர்டெல், இன்போசிஸ், கெயில் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. இவைகள் தவிர்த்து இன்சூரஸ் துறை பங்குகளான ரிலையன்ஸ் கேபிட்டல், மேக்ஸ் இந்தியா, ஆதித்யா பிர்லா மற்றும் பஜாஜ் பினான்சியல் சர்வீஸ் நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)