பதிவு செய்த நாள்
20 மார்2015
07:26
மும்பை : இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் நிறுவனமான ' பெனல்லி ' அதன் 5 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. ரூ.2.83 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ள இந்த பைக், ஜப்பான், அமெரிக்கா மற்றும் கொரியா சூப்பர் பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தாலியின் பெசாரோ நகரத்தை தலைமை இடமாக கொண்டு பைக் களை தயாரித்து வரும், நூற்றாண்டு பழைமையான பெனல்லி நிறுவனம், பூனே யை சேர்ந்த டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, பைக் களை அசம்பிள் செய்து இந்தியாவில் விற்கிறது. டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் பைக் களை விற்கும். இப்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் பெனல்லி பைக்குகள் முறையே, ரூ.2.83 லட்சம், ரூ.5.15 லட்சம், ரூ.5.62 லட்சம், ரூ.9.48 லட்சம் மற்றும் ரூ.11.81 லட்சம் விலையில் ( மும்பையில் எக்ஸ் ஷோரூம் விலை ) கிடைக்கும். இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு கிராக்கி அதிகமாகியுள்ளதை அடுத்து இந்த இத்தாலி சூப்பர் பைக்குகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுவதாக டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் இன் சேர்மன் சிரிஸ் குல்கர்னி தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|