பதிவு செய்த நாள்
24 மே2015
14:41
சென்னை: ''சிட்டி யூனியன் வங்கியின், நான்காவது காலாண்டு நிகர லாபம், கடந்த ஆண்டைவிட, 19 சதவீதம், அதாவது, 99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என, வங்கியின், நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி, என்.காமகோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் நேற்று, அவர் கூறியதாவது: கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டுள்ள சிட்டி யூனியன் வங்கி, 475 கிளைகள், 1,086 ஏ.டி.எம்., மையங்களுடன் இயங்கி வருகிறது. ஏ.டி.எம்., மையங்களில், 50 சதவீதம் தமிழகத்திலும்; 25 சதவீதம், ஒன்றுபட்ட ஆந்திராவிலும்; மீதமுள்ள, 25 சதவீதம், நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ளன. இதை, 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம், கடந்த நிதியாண்டில், 10 சதவீதம் உயர்ந்து, 42,164 கோடி ரூபாயாகி உள்ளது. வங்கி வாடிக்கையாளரின் டிபாசிட் மற்றும் கடன் அளிக்கப்பட்ட தொகை, கடந்த ஆண்டை விட, முறையே, 9.35 சதவீதமும், 11.50 சதவீதமும் உயர்ந்து, 24,075 கோடி ரூபாயாகவும், 18,089 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டைக் காட்டி லும், 13.82 சதவீதம் உயர்ந்து, 395 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; நிகர மதிப்பு, 2,006 கோடி ரூபாயிலிருந்து, 2,666 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை விட, 19 சதவீதம் அதிகரித்து, 99.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி, 110வது ஆண்டை கொண்டாடுவதையொட்டி, பங்குதாரர்களுக்கு, 110 சதவீத, 'டிவிடெண்ட்' அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|