பதிவு செய்த நாள்
25 மே2015
15:06
மும்பை : நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, தங்களது வாடிக்கையாளர்களுக்காக, குரல் பாஸ்வேர்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வங்கிகளில் பணப்பரிமாற்றம் தற்போது, டெபிட் கார்டு எண்களை அழுத்துதல், செக்யூரிட்டி கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் பின் நம்பர்களை அழுத்துவது மூலம் நடைபெற்று வருகிறது. இந்த வங்கிச்சேவைகளில், புதுமையை புகுத்தும் பொருட்டு, தங்கள் வங்கி, வாய்ஸ் பாஸ்வேர்டு சேவையை அறிமுகப்படுகிறது.
வங்கி வாடிக்கையாளர்கள், பணப்பரிமாற்றத்தின்போது, தங்கள் குரலை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த குரல், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, இதன்மூலம், பணப்பரிமாற்றம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவையை, சேமிப்புக்கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் என 33 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|