பதிவு செய்த நாள்
01 ஜூன்2015
10:08
மும்பை : வார வர்த்தகத்தின் முதல்நாளான இன்று, பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 51.71 புள்ளிகள் உயர்ந்து 27,880.15 என்ற அளவில் உள்ளது. கடந்த செசனில், சென்செக்ஸ் 321.73 புள்ளிகள் அதிகரித்திருந்த நிலையில், இன்றும், பங்குவர்த்தகம், ஏற்றத்துடன் துவங்கியிருப்பது, பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ரியாலிட்டி, வங்கிகள், தகவல்தொழில்நுட்படம், மெட்டல், பொதுத்துறை நிறுவனங்கள், மின்துறை நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 15.40 புள்ளிகள் அதிகரித்து 8,449.05 என்ற அளவில் உள்ளது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.19 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 0.58 சதவீத சரிவுடன் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|