பதிவு செய்த நாள்
29 ஜூன்2015
11:32
ஏதென்ஸ் : நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கிரீசில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் ஒருவாரம் மூடப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் தெரிவித்துள்ளார். நிதியுதவி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து மந்தமடைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் பிரதமரின் அறிவிப்பால் இன்று முதல் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டுகள் மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் தங்களது முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை உடனடியாக குறைக்க இது வழிவகுக்கும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிகள் மூடப்பட்டதால் கிரீசில் ஏ.டி.எம்., சேவையும் முடங்கி உள்ளது.
ஆன்லைன் மூலமான வெளிநாட்டு பண பரிமாற்றமும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டில் மின்னணு பரிமாற்றம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிமாற்றங்கள் எவ்வித தடையின்றி இயங்கும் என கிரீஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகின் பெரும்பாலான நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடி நிலை காரணமாக ஐரோப்பிய சந்தைகளில் உலக நாடுகளின் முதலீடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|