பதிவு செய்த நாள்
02 ஜூலை2015
15:59
சென்னை: வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளுக்கு அறிவுரை செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சென்னையில் தெரிவித்தார். சென்னை வந்திருந்த ரகுராம் ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. இந்திய பொருளதாரம், வளர்ச்சிப் பாதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உள்ளநாட்டு முதலீடு அதிகரிக்கும் அறிகுறிகள் மூலமே இதனை அறிந்து கொள்ள முடியும். பணவீக்கம் என்பது கவலைக்குரிய விஷயம். இதனை நிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கீரிசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, இந்தியாவை நேரடியாக பாதிப்பது குறைவு என்றாலும் மறைமுக பாதிப்பு அதிகம். கடன் வட்டியை வங்கிகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பருவ மழை வழக்கத்தை விட அதிகம் பெய்துள்ளது. இந்திய பொருளதாரம் நல்ல நிலைக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|