பதிவு செய்த நாள்
28 ஜூலை2015
10:14
மும்பை : தொடர் சரிவை தொடர்ந்து, பங்குவர்த்தகம், இன்று உயர்வுடன் துவங்கி, பங்குமுதலீட்டாளர்களை சற்று நிம்மதியடைய வைத்துள்ளது.
இன்றைய (ஜூலை 28ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 100.08 புள்ளிகள் அதிகரித்து 27,661.46 என்ற அளவில் உள்ளது.
கடந்த 3 செசன்களில், 943.55 புள்ளிகள் அளவிற்கு குறைந்திருந்த சென்செக்ஸ், இன்று 100 புள்ளிகள் அளவிற்கு ஏற்றம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பம், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், கேப்பிடல் குட்ஸ், ஹெல்த்கேர், பேங்கிங் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் உள்ளன.
தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 30.75 புள்ளிகள் அதிகரித்து 8,391.75 என்ற அளவில் உள்ளது.
மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 1.86 சதவீத உயர்வுடனும், ஜப்பான் பங்குச்சந்தை 0.94 சதவீத சரிவுடனும் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|