பதிவு செய்த நாள்
04 செப்2015
15:59
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் சற்று நேரத்திலேயே அதிகம் சரிந்தன. உலகளவில் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை லாபம் நோக்கம் கருதி விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 562.88 புள்ளிகள் சரிந்து 25,201.90-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 167.95 புள்ளிகள் சரிந்து 7,655.05-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 585 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 2112 நிறுவன பங்குகள் சரிவுடனும், 80 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|