பதிவு செய்த நாள்
30 செப்2015
12:56
சமீபத்தில் அறிமுகப்படுத்திய, ‘எஸ் கிராஸ்’ பிரீமியம் ரக கார் விற்பனையை அதிகரிக்க, மாருதி சுசூகி நிறுவனம், சலுகைகளை அளிக்க துவங்கியுள்ளது. சிறிய வகை கார்கள் விற்பனையில், நாட்டில் முதலிடத்தில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம், பிரீமியம் கார் சந்தையில், விற்பனையை அதிகரிப்பதற்காக, எஸ் கிராஸ் காரை அறிமுகம் செய்தது. அத்துடன், விலை அதிகமான கார்களை விற்க, ‘நெக்சா’ என்ற, பிரத்யேக விற்பனையகங்களையும், நாடு முழுவதும் திறந்துள்ளது.
தற்போது, எஸ் கிராஸ் விற்பனையை அதிகரிக்க, சென்னை, டில்லி மற்றும் மும்பையில், காரின் மாடலுக்கேற்ப, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் வரை, விலை தள்ளுபடி சலுகை வழங்கி வருகிறது. உதாரணத்துக்கு, 1.6- லிட்டர், ‘டி.டி.ஐ.எஸ்., 320’ மாடலை வாங்குவோருக்கு, 70 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலைச்சலுகை தரப்படுகிறது.
அதேபோல, பழைய மாருதி காரை கொடுத்து விட்டு, எஸ்.கிராஸ் காரை வாங்கும் போது, 30 ஆயிரம் ரூபாய், ‘லாயல்டி போனஸ்’ என, மொத்தத்தில், ஒரு லட்சம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர, 1.3 லிட்டர் மாடல் காரை வாங்கும் போதும், கணிசமான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|