பதிவு செய்த நாள்
30 செப்2015
16:53
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று(செப்., 30ம் தேதி) எழுச்சி காணப்பட்டன. ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இதன் எதிரொலியாக நேற்று முதல் பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் அந்த ஏற்றம் இன்றும் தொடர்ந்து. காலையில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்த நிலையில், மதியத்திற்கு மேலும் நன்கு ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.17 புள்ளிகள் உயர்ந்து 26,154.83-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 105.60 புள்ளிகள் உயர்ந்து 7,948.90-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 6 நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன. குறிப்பாக பார்த்தி ஏர்டெல், பெல், கெயில், கோல் இந்தியா ஹெச்யுஎல்., இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி., பஜாஜ் ஆட்டோ மற்றும் என்டிபிசி., நிறுவன பங்குகள் உயர்வுடனும், எஸ்பிஐ., ஆக்சிஸ் நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|