பதிவு செய்த நாள்
23 அக்2015
16:15
பியட் நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மேம்படுத்தப்பட்ட, ‘அபார்த் பன்ட்டோ இவோ’ மற்றும், ‘அவெஞ்சுரா’ கார்களை சந்தையில் களமிறக்கியுள்ளது. இவற்றின், புறத்தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், இன்ஜின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அபார்த் பன்ட்டோ இவோவில், 145 குதிரைசக்தி திறன் உற்பத்தி செய்யக்கூடிய, மேம்படுத்தப்பட்ட, ‘1.4 லிட்டர் டி – ஜெட் டர்போ சார்ஜ்ட்’ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோல், அவெஞ்சுராவில், அதே இன்ஜின், 140 குதிரைசக்தி திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த இரு கார்களிலும், ‘டூவல் ஏர்பேக், ஆன்ட்டி பிரேக் லாக்கிங் சிஸ்டம்’ மற்றும் மேம்படுத்தப்பட்ட, ‘இ.பி.டி., பிரேக்கிங் சிஸ்டம்’ இடம்பெற்றுள்ளன.
அவெஞ்சுராவின் உட்புறத்தில், பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பன்ட்டோ இவோவில், டயரில், 16 அங்குல, ‘அலாய் ரிம்’ பொருத்தப்பட்டுள்ளது. காரின் இருக்கைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற நுாலில் தைக்கப்பட்டுள்ளன. காரின், ‘புட்பெடல்கள்’ ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கார்களின் விலையும், 9.95 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|