பதிவு செய்த நாள்
01 பிப்2016
18:17
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தாங்களே விலையை உயர்த்தியோ அல்லது குறைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் தற்போது பெட்ரோல் டீசல் விலை கடுகளவு குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 3 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின்படி டில்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.59.99-லிருந்து ரூ.59.95-ஆகவும், டீசல் விலை ரூ.44.71-லிருந்து ரூ.44.68-ஆகவும் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4 டாலர் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பின்படி எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ.1.04-யும், டீசல் விலையை ரூ.1.53 குறைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.1-யும், டீசலுக்கான கலால் வரியை ரூ.1.50 காசும் உயர்த்தி, பெட்ரோல், டீசல் விலையை பேரளவுக்கு 4, காசுகளும், 3 காசுகளும் குறைத்துள்ளது.
ஒரு மாதத்தில் மட்டும் மத்திய அரசு, கலால் வரியை மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.3,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|