தங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.40 உயர்வுதங்கம் விலை மாலைநிலவரப்படி ரூ.40 உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68-க்கு கீழ் வந்தது ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68-க்கு கீழ் வந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
3-வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 315 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
17:52

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள், ரூபாயின் மதிப்பு ரூ68-ஐ எட்டியது, உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 315.68 புள்ளிகள் சரிந்து 24,223.32-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 93.75 புள்ளிகள் சரிந்து 7,361.80-ஆகவும் முடிந்தன.

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் கடந்த 3 தினங்களில் 647 புள்ளிகள் சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 26 நிறுவன பங்குகள் சரிந்தும், 4 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.

குறிப்பாக எரிசக்திதுறை பங்குகள் 4.16 சதவீதமும், முதலீட்டு தொடர்பான பங்குகள் 2.79 சதவீதமும், கட்டுமானதுறை பங்குகள் 2.30 சதவீதமும், உலோகம் தொடர்பான பங்குகள் 2.03 சதவீதமும், பொதுத்துறை நிறுவன பங்குகள் 1.96 சதவீதமும், வங்கி தொடர்பான பங்குகள் 1.63 சதவீதமும், ஆட்டோ‌மொபைல் பங்குகள் 1.62 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1.58 சதவீதமும் சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)