தங்கம் விலையில் அதிரடி - மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.920 அதிகரிப்புதங்கம் விலையில் அதிரடி - மாலைநிலவரப்படி சவரனுக்கு ரூ.920 அதிகரிப்பு ... துவரம் பருப்பு மூடைக்கு ரூ.5 ஆயிரம் குறைந்தது துவரம் பருப்பு மூடைக்கு ரூ.5 ஆயிரம் குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகளில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2016
17:51

மும்பை : கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தைகள் இந்தவாரம் கடும் சரிவை சந்தித்து இருக்கிறது.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாகவும், ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதாலும் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக‌வே பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வந்தன. குறிப்பாக இந்தவாரம் கடுமையாக சரிந்தன.
இந்தவாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1,630.85 புள்ளிகளும், நிப்டி 508.15 புள்ளிகளும் சரிந்தது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு ஒருவாரத்தில் அதிக சரிவை சந்தித்தது இந்த வாரம் தான்.
இதனிடையே இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்.12ம் தேதி) சிறிய ஏற்றத்துடன் முடிந்தன. முன்னதாக வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை‌ செய்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. இருப்பினும் வர்த்தகம் முடியும் போது சிறிய ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 34.29 புள்ளிகள் உயர்ந்து 22,986.12-ஆகவும், நிப்டி 4.60 புள்ளிகள் உயர்ந்து 6,980.95-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 15 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 15 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)