பதிவு செய்த நாள்
20 பிப்2016
04:07
மும்பை:ரூ.800 கோடி கடனை திரும்பத் தராத, ‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம்; அதன் நிறுவனர் விஜய் மல்லையா, யுனைடெட் புருவரீஸ் நிறுவனம் ஆகியவற்றை, அவரது, ‘வசதி இருந்தும் கடனை திரும்ப தராதோர்’ பட்டியலில், ‘பஞ்சாப் நேஷனல் பாங்க்’ அண்மையில் சேர்த்தது.
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நிறுவனருக்கோ, வேறு எந்த வங்கியும் கடன் வழங்காது. அப்படியே, கடனை அடைத்தாலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட நாள் முதல், ஐந்து ஆண்டுகளுக்கு, வேறு நிறுவனங்களை துவக்குவதற்கான நிதியுதவி பெறவும், ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
ஏற்கனவே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, விஜய் மல்லையாவை, வசதி இருந்தும் கடனை அடைக்காதோர் பட்டியலில் சேர்த்துள்ளன. மூன்றாவதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேர்த்துள்ளது. அந்த எரிச்சலில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கியை விட்டால், எனக்கு கடன் தர வேறு வங்கியா இல்லை?’ என்ற தொனியில், விஜய் மல்லையா, ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
‘நாட்டில் அந்த ஒரு வங்கி மட்டுமா உள்ளது? என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்; உரிய விதத்தில் வங்கி கடனை அடைப்பேன்’ எனவும், அவர் கூறியுள்ளார். மூடப்பட்ட கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், 17 வங்கிகளிடம் இருந்து, 6,963 கோடி ரூபாய் கடன் பெற்று, திரும்பத் தராமல் உள்ளது. ஆனால், எதற்கும் அசராத விஜய் மல்லையாவோ, பல கோடி செலவில் ஆடம்பர விழாக்களை நடத்தி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
வங்கிகள் பதிலடி...கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து, கடன் தொகையை மீட்க, நான்கு வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதில், முதலாவதாக, மும்பையில் உள்ள, 150 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடம், அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|