பதிவு செய்த நாள்
21 பிப்2016
06:18
புதுடில்லி : மத்திய அரசு துறைகளில், கணினி சார்ந்த, ரகசிய கோப்புகளை பாதுகாக்கும் ஆலோசனைகளை, மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், வழங்கத் துவங்கி உள்ளது.இந்நிறுவனம், கூர்கானில், இந்திய சைபர் பாதுகாப்பு மையத்தை திறந்துள்ளது. இம்மையம், கணினியில் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான அம்சங்களை தடுப்பது, மின்னஞ்சலில் மிரட்டல் விடுப்போரை கண்டறிவது, ரகசிய கோப்புகளை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இத்துடன், மத்திய அரசின் முக்கிய துறைகளில், தகவல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும் வழங்கத் துவங்கியுள்ளது. ‘‘மத்திய அரசு, கணினி சார்ந்த கோப்புகளின் பாதுகாப்பு பற்றிய நெறிமுறைகளை உருவாக்கினால், அதன் அடிப்படையில், கோப்புகளுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சேவை வழங்கப்படும்,’’ என்கிறார், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை சட்ட அலுவலர், பிராட் ஸ்மித்.அமெரிக்க அரசின் ரகசிய கோப்புகளை, ‘விக்கிலீக்ஸ்’ வலைதளம் அம்பலப்படுத்திய பின், பல நாடுகள், கோப்புகளை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|