பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:40
புதுடில்லி : ‘‘வரும் மார்ச்சுடன் முடிவடையும், நடப்பு, 2015 – 16ம் நிதியாண்டில், மொபைல் போன் தயாரிப்பு, 40 ஆயிரம் கோடியை தாண்டும்,’’ என, தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பார்லிமென்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த, 7 – 8 மாதங்களில், மொபைல் போன் நிறுவனங்கள், 250 – 300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அவற்றின் முதலீடு, 600 – 650 கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், 18,900 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டன. இது, நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் கோடியாக உயரும் என, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.கடந்த, எட்டு மாதங்களில், தொலைதொடர்பு துறையில், 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. மார்ச் இறுதிக்குள், மேலும், 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் போன் துறையின் இத்தகைய சிறப்பான வளர்ச்சிக்கு, உற்பத்தி வரி சலுகை தான் காரணம். அதனால் ஊக்கமடைந்துள்ள, மைக்ரோமேக்ஸ், செல்கான், கார்பன், பாக்ஸ்கான், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்கள், மொபைல் போன் தயாரிப்பை அதிகப்படுத்தியுள்ளன. அத்துடன், இடர்பாடுகளை சமாளிக்க ஏதுவாக, மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கச் சலுகையும், வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|