பதிவு செய்த நாள்
04 மார்2016
06:34
மும்பை : கிராமப்புற தொழில்களுக்கு புத்துயிர் அளிக்கும் பொருட்டு, காதி கிராம தொழில் நிறுவனம், திட்ட ஆலோசனைகளுக்காக, எஸ்.பி.ஜெயின் நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. கிராமப்புற, பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான காதிக்கு, புத்துயிர் அளிக்கவும், நவீனப்படுத்தவும், காதி நிறுவனம், எஸ்.பி.ஜெயின் நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. காதியின் திட்டங்களுக்கான ஆலோசனைகளை அந்நிறுவனம் அளிக்கவுள்ளது.‘மாறி வரும் தேவை, தொழில் போட்டிக்கு ஏற்ப புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், அதற்கான திட்டமிடலை வடிவமைக்கவும், இந்த ஒப்பந்தம் உதவும்’ என, காதி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|