பதிவு செய்த நாள்
04 மார்2016
06:36
புதுடில்லி : மத்திய பட்ஜெட்டில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட, ‘பிராண்டட்’ ஆயத்த ஆடைகளுக்கு, இரு மடங்கு வரி விதிக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து, விற்பனை சரியும் என, இத்துறை சார்ந்தவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச பொருளாதார மந்தநிலையால், ஜவுளி துறையின் ஏற்றுமதி ஏற்கனவே சரிந்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டிலும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட, வணிக முத்திரையுள்ள ஆயத்த ஆடைகளுக்கு, புதிதாக, 2 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுஉள்ளது.
அதிக வரிதற்போது, ஆயத்த ஆடைகளுக்கான மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்பப் பெறாதோருக்கு, பூஜ்ய வரியும்; திரும்பப் பெறுவோருக்கு, 6 – 12.5 சதவீத உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. பட்ஜெட்டில், மூலப் பொருட்களுக்கு செலுத்திய வரியை திரும்ப பெறாதோருக்கு, 2 சதவீதமும், வரியை திரும்பப் பெறுவோருக்கு, 12.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு, வரும் ஏப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ‘புதிய வரி விதிப்பால், பிராண்டட் ஆடைகளின் விலை, 5 – 6 சதவீதம் உயரும். அத்துடன், 15 சதவீத சேவை வரியும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறையும் லாப வரம்புபிராண்டட் ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டு வரும், உட்மால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஹர்கிரத் சிங் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆடைகள் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது, உயர்த்தப்பட்டுள்ள உற்பத்தி வரி, பிரச்னையை மேலும் பெரிதாக்கும். எங்களின் லாப வரம்பு குறையும். வரிச் சுமையை, நாங்கள் மக்கள் மீது தான் சுமத்த நேரிடும். 1,000 முதல் 2,000 ரூபாய் வரையிலான ஆடைகளை வாங்குவோருக்கு கூடுதலாக செலவாகும். ஏற்கனவே, பிராண்டட் ஆடைகளுக்கான தேவை குறைந்துள்ளது. இந்த நிலையில், வரி விதிப்பால், விற்பனை மேலும் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் பியானி கூறுகையில், ‘‘ பிராண்டட் ஆடைகளுக்கு, இரு மடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. இது, வியாபாரத்தில் மேலும் சுணக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.
சரியும் நிலை‘‘ஏற்கனவே, சற்று அதிக விலையுள்ள ஆடைகளின் விற்பனை குறைந்துள்ளது. இது, வரி உயர்வால் அடியோடு சரியும்,’’ என, ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கோவிந்த் ஸ்ரீகடே தெரிவிக்கிறார்.‘பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பை குறைக்க வேண்டும்’ என, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|