பதிவு செய்த நாள்
29 மார்2016
07:07
மும்பை : அமுல் நிறுவனம், கோல்கட்டா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில், பால் பதப்படுத்தும் ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, ‘அமுல்’ என்ற பெயரில், பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. பால் பதப்படுத்தும் ஆலைகள் குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோதி கூறியதாவது: நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 65 பால் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. தற்போது கான்பூர், லக்னோவில், பால் பதப்படுத்தும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, 56 மாதங்களில் செயல்பாட்டிற்கு வரும். கோல்கட்டாவில், பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 200 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலும், ஆலைகள் அமைக்க திட்டமிப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|