பதிவு செய்த நாள்
29 மார்2016
07:09
புதுடில்லி : கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக, அவற்றின் நிகர லாபத்தில், 2 சதவீதத்தை செலவழிக்கின்றன. இதன்படி, பொதுமக்களின் சுகாதார வசதிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகின்றன. இந்நிலையில், நிறுவனங்கள், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ‘துாய்மை இந்தியா’ போன்ற திட்டங்களுக்கு, 30 சதவீதம் செலவழிக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு கட்டாயமாக்க திட்டமிட்டு உள்ளது. வரும் மே மாதம், பா.ஜ., அரசின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில், பிரதமர் மோடி, இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என, தெரிகிறது. இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு, நிறுவனங்கள் வாயிலாக, துாய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, நிறுவனங்கள், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில், குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட சுகாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இனி, ஒவ்வொரு நிறுவனமும், குறிப்பிட்ட அளவிற்கு கிராமப்புறங்களை தேர்ந்தெடுத்து, சுகாதார வசதிகளை செய்து கொடுக்குமாறு உத்தரவிடுவது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இத்துடன், மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவில், நிறுவனங்களின் சமூக பணிகளை பாராட்டி பரிசு வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது, நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு பணிகளை மேலும் ஊக்குவித்து, மத்திய அரசின் சமூகநல திட்டங்களின் வெற்றிக்கு துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|