பதிவு செய்த நாள்
27 ஏப்2016
00:10
மும்பை : சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி, இந்தியாவில் முதன் முதலாக, மொபைல்போன் வாயிலாக மட்டுமே, அனைத்து வகையான வங்கிச் சேவைகளை வழங்கத் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள், ஆவணங்களின்றி, கையெழுத்தின்றி, கிளைகளை அணுகாமல், அனைத்து விதமான வங்கிச் சேவைகளையும், மொபைல்போன் மூலமாகவே மேற்கொள்ளலாம். இவ்வங்கி, ஒருவரின் விழித்திரை பதிவு மற்றும் ‘ஆதார்’ அட்டையை அடிப்படையாக வைத்து, கணக்கை துவக்கித் தருகிறது. இத்துடன், வாடிக்கையாளர்களுக்கு, ‘டெபிட்கார்டு’ வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில், 2 லட்சத்திற்கும் அதிகமான ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்கலாம். இந்த மொபைல்போன் வங்கியில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சேமிப்பு கணக்கிற்கு, 7 சதவீத வட்டி வழங்குவதாக,டி.பி.எஸ்., கூறுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|