பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:27
புதுடில்லி : நடப்பு பருவத்தில், இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகளவில், சர்க்கரை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில், மஹாராஷ்டிரா, உ.பி., தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், அதிகளவில் கரும்பு விளைகிறது. இருப்பினும், மஹாராஷ்டிராவில் தான், கரும்பு பிழி திறன் சிறப்பாக உள்ளது. நடப்பு, 2016 – 17 சர்க்கரை பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.40 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்படுகிறது. இது, முந்தைய பருவத்தில், 2.53 கோடி டன்னாக இருந்தது. இதுகுறித்து, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், ‘‘நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை பயன்பாடு, 3.10 கோடி டன்னில் இருந்து, மூன்று கோடி டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|