சோத­னை­யிலும் இந்­தியா சாதனை: நொமுராசோத­னை­யிலும் இந்­தியா சாதனை: நொமுரா ... சினிமா டிக்கெட்டுக்கு கடன் புக்மைஷோ நிறுவனம் திட்டம் சினிமா டிக்கெட்டுக்கு கடன் புக்மைஷோ நிறுவனம் திட்டம் ...
சீன ஊதிய விகி­தத்தால் இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில் 12 லட்சம் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
06:31

புது­டில்லி : ‘சீனாவில், ஊதிய விகிதம் உயர்ந்து வரு­வதன் எதி­ரொ­லி­யாக, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், லட்­சக்­க­ணக்கில் வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்’ என, உலக வங்­கியின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:சீனாவில், ஊதிய விகிதம் அதி­க­ரித்து வரு­வதால், ஆயத்த ஆடைகள் தயா­ரிப்பு செலவு உயர்ந்­துள்­ளது. இது, இளம் வயது தொழி­லா­ளர்கள் அதிகம் உள்ள இந்­தி­யா­விற்கு, குறிப்­பி­டத்­தக்க வேலை­வாய்ப்­பு­களை வழங்கும். இந்­தி­யாவின் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும். சீன ஆயத்த ஆடை­களின் விலை, 10 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், 12 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர் வேலை­வாய்ப்பு பெறுவர். குறிப்­பாக, இத்­து­றையில் பெண்கள் அதி­க­மாக உள்­ளதால், அவர்கள் அதிக அளவில் பய­ன­டைவர்.
சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழி­லா­ளர்­களின் ஊதியம், 1 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழி­லா­ளர்­களின் பங்கு, 18.9 சத­வீதம் உயரும். இந்த வாய்ப்பை, இந்­திய அரசு பயன்­ப­டுத்திக் கொண்டு, ஆயத்த ஆடை தயா­ரிப்­பிற்­கான செயற்கை நுாலிழை இறக்­கு­ம­திக்கு உள்ள கட்­டுப்­பா­டு­களை தளர்த்த வேண்டும். அத்­துடன், உள்­நாட்டு செயற்கை நுாலிழை தயா­ரிப்பு துறையை ஊக்­கு­விக்கும் வகையில், உற்­பத்தி வரி குறைப்பு அல்­லது பிற சலு­கை­களை வழங்க வேண்டும். இதன் மூலம், செயற்கை நுாலி­ழையில் தயா­ராகும் ஆயத்த ஆடை­களின் உற்­பத்தி செலவு குறையும்; ஏற்­று­மதி அதி­க­ரிக்கும். ஆயத்த ஆடைகள் விலை உயர்வால், சீனா இழக்கும் சர்­வ­தேச வாடிக்­கை­யா­ளர்­களை, இந்­தி­யாவால் ஈர்க்க முடியும்.
ஆயத்த ஆடைகள் ஏற்­று­ம­தியில், சீனா முத­லி­டத்தில் உள்­ளது. இருந்­த­போ­திலும், அதன் ஏற்­று­மதி குறைந்து வரு­கி­றது. கடந்த, 1990ல், சீனாவின் ஏற்­று­ம­தியில், 15.6 சத­வீ­த­மாக இருந்த ஆயத்த ஆடைகள் பிரிவு, 2012ல், 7.1 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, தென் கிழக்கு ஆசிய நாடு­க­ளுக்கு, வள­மான ஏற்­று­மதி வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது.
இந்­தியா துரி­த­மாக செயல்­பட்டு, செயற்கை நுாலி­ழையை சுல­ப­மாக இறக்­கு­மதி செய்­வது, வரி­களை குறைப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிக அளவில் ஆயத்த ஆடைகள் துறையில், அன்­னிய முத­லீடு குவியும் என்­ப­துடன், சீனா­வுடன் போட்­டி­யிடும் வகையில், காலணி, பொம்மை போன்ற இதர தயா­ரிப்பு துறை­களும் வளர்ச்சி காணும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
சீனாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழி­லா­ளர்­களின் ஊதியம், 1 சத­வீதம் உயர்ந்தால் கூட, இந்­திய ஆயத்த ஆடைகள் துறையில், பெண் தொழி­லா­ளர்­களின் பங்கு, 18.9 சத­வீதம் உயரும்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)