பதிவு செய்த நாள்
01 மே2016
02:58
புதுடில்லி:கடந்த நிதி ஆண்டின், மூன்றாவது காலாண்டில், நாட்டில், வீடுகளின் விலை உயர்ந்து உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. நாட்டில், மும்பை, டில்லி, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில், 2015 – 16ம் நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், வீடுகள் விலை குறித்த விவரத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த காலாண்டில், வீட்டு விலை குறியீட்டு எண், 218.20ல் இருந்து, 221.7 ஆக அதிகரித்துள்ளது. உ.பி., மாநிலம், லக்னோவில், வீடுகள் விலை மிக அதிகளவிற்கு அதாவது, 16.1 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், வீடு விலை, 5.20 சதவீதம் குறைந்துள்ளது. கேரளா மாநிலம், கொச்சியில் வீட்டு விலை, 8 சதவீதம் உயர்ந்த நிலையில், பெங்களூருவில், 1 சதவீதம் குறைந்து உள்ளது.பிசினஸ் துளிகள்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|