பதிவு செய்த நாள்
01 மே2016
03:12
புதுடில்லி:அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, சுமுக தீர்வு காண, தனி தீர்ப்பாயம் அமைப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அரசு – தனியார் கூட்டு திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளில், மிக விரைவாக தீர்வு காண முடியும்; தேக்கம் கண்டுள்ள ஏராளமான கூட்டு திட்டங்கள், செயல்பாட்டிற்கு வருவதற்கான சூழல் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 1,300 திட்டங்களை நிறைவேற்ற, ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மை அடிப்படை கட்டமைப்பு துறையைச் சார்ந்தவை.இத்தகைய திட்டங்களுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெறுவது போன்ற நடைமுறைகளில், காலதாமதம் ஏற்படுகிறது. பல திட்டங்கள், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை உத்தரவால் முடங்கியுள்ளன. திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகையில், திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனங்கள் மறுக்கின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு, நிதி துறை முன்னாள் செயலர், விஜய் கேல்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டு திட்டங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும், தன் பரிந்துரையை, நிதியமைச்சகத்திடம் வழங்கியுள்ளதுஅதன் அடிப்படையில், தயாரிக்கப்படும், மசோதாவுக்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததும், தீர்ப்பாயம் நடைமுறைக்கு வரும் என, நிதி துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|