இந்தியாவுக்கு வெளியே,டாடா சன்ஸ்போர்டு மீட்டிங், இந்தியாவுக்கு வெளியே,டாடா சன்ஸ்போர்டு மீட்டிங், ... நகர்ப்புற செலவினங்களால்... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் நகர்ப்புற செலவினங்களால்... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக ... ...
அரசு – தனியார் திட்டங்களுக்கு தீர்ப்பாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2016
03:12

புதுடில்லி:அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, சுமுக தீர்வு காண, தனி தீர்ப்பாயம் அமைப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், அரசு – தனியார் கூட்டு திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளில், மிக விரைவாக தீர்வு காண முடியும்; தேக்கம் கண்டுள்ள ஏராளமான கூட்டு திட்டங்கள், செயல்பாட்டிற்கு வருவதற்கான சூழல் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து, 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 1,300 திட்டங்களை நிறைவேற்ற, ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மை அடிப்படை கட்டமைப்பு துறையைச் சார்ந்தவை.இத்தகைய திட்டங்களுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெறுவது போன்ற நடைமுறைகளில், காலதாமதம் ஏற்படுகிறது. பல திட்டங்கள், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை உத்தரவால் முடங்கியுள்ளன. திட்டங்களில் ஏற்பட்ட காலதாமதத்தால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகையில், திட்டத்தை செயல்படுத்த, தனியார் நிறுவனங்கள் மறுக்கின்றன. இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு, நிதி துறை முன்னாள் செயலர், விஜய் கேல்கர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டு திட்டங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும், தன் பரிந்துரையை, நிதியமைச்சகத்திடம் வழங்கியுள்ளதுஅதன் அடிப்படையில், தயாரிக்கப்படும், மசோதாவுக்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளித்ததும், தீர்ப்பாயம் நடைமுறைக்கு வரும் என, நிதி துறை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)