பதிவு செய்த நாள்
03 மே2016
06:46
லண்டன் : பிரிட்டனில், கடும் இழப்பை சந்தித்துள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின், போர்ட் டல்போல்ட் தொழிற்சாலையை, லிபர்டி குழுமத்தின் நிறுவனர், சஞ்சீவ் குப்தா வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம், 2009ல், பிரிட்டனில் செயல்பட்டு வந்த, கோரஸ் தொழிற்சாலையை, 670 கோடி பவுண்டுகளுக்கு வாங்கியது. உருக்கு விலை சரிவு, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மலிவு விலை உருக்கு பொருட்களை கட்டுப்படுத்த, பிரிட்டன் அரசு தவறியது உள்ளிட்ட காரணங்களால், டாடா ஸ்டீல் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதையடுத்து, பிரிட்டனில் உருக்கு வர்த்தகத்தில் இருந்து வெளியேறப் போவதாக, இரு மாதங்களுக்கு முன், டாடா ஸ்டீல் அறிவித்தது.
இந்நிலையில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின், போர்ட் டல்போட் உருக்கு தொழிற்சாலையை வாங்க, சஞ்சீவ் குப்தா திட்டமிட்டுள்ளார். இவர், பஞ்சாபில் பிறந்து, பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர். சமீபத்தில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின், இரண்டு உருக்கு தொழிற்சாலைகளை, ஸ்காட்லாந்து அரசு மூலம் கையகப்படுத்தினார். கடந்த வாரம், லிபர்டி குழும அதிகாரிகள், போர்ட் டல்போர்ட் உருக்கு தொழிற்சாலையை, வல்லுனர் குழுவுடன் இணைந்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, தொழிற்சாலைக்கான விலைப்புள்ளியை, சஞ்சீவ் குப்தா இன்று டாடா ஸ்டீல் நிறுவனத்திடம் வழங்க உள்ளதாக, லிபர்டி குழுமத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரிட்டனில், டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான வேறு சில உருக்கு தொழிற்சாலைகளை வாங்க, அந்நாட்டைச் சேர்ந்த, அல்பியன் ஸ்டீல் உட்பட ஒரு சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|