பதிவு செய்த நாள்
04 மே2016
00:47
புதுடில்லி : டாடா சன்ஸ் நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு, கற்பனையிலும் நினைத்திராத சலுகைகளை அறிவித்து அசத்தியுள்ளது. அதன்படி, இம்மாதம் முதல், கர்ப்பிணிகளுக்கு ஊதியத்துடன் ஏழு மாத விடுப்பு வழங்கப்படுகிறது. பிரசவத்திற்கு பின், ஒன்றரை ஆண்டுகளுக்கு அரை நாள் மட்டும் பணியாற்றி, அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், பிரசவத்திற்கு பின், ஓராண்டுக்கு, அரை மாத ஊதியமுடன் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். பிரசவ கால விடுப்பு முடிந்த பின்னும், 18 மாதங்களுக்கு பெண்கள் வீட்டில் இருந்தபடியே, விருப்பமான நேரத்தில் பணியாற்றலாம். இதற்காக குறைவான பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு அரை மாதம் ஊதியம் வழங்கப்படும்.முழு நேரம் பணியாற்ற விரும்புவோர், வாரத்தில் இரு நாட்கள், விருப்பமான நேரத்தில் பணியாற்றலாம் என, டாடா சன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|