பதிவு செய்த நாள்
06 மே2016
04:07
புதுடில்லி : சன் பார்மாசூடிக்கல்ஸ், ‘டெங்கு’ நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்து தயாரிக்க, ஜப்பான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. சன் பார்மாசூடிக்கல்ஸ் நிறுவனம், டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க கூடியமருந்து பொருட்களை, தாவரங்கள் மூலம் தயாரிக்க, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ‘இன்டர்நேஷனல் சென்டர் பார் ஜெனடிக் இன்ஜினியரிங் அண்டு பயோடெக்னாலஜி’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளது. மேலும், சன் பார்மா, ஜப்பானை சேர்ந்த நோவர்டிஸ் பார்மா என்ற நிறுவனத்தின், 14 வகையான மருந்து பொருட்களை கையகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சன் பார்மா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜப்பான் நிறுவனத்துடன், சன் பார்மா ஒப்பந்தம் செய்ததன் மூலம், இந்தியாவில், டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க, தரமான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|