பதிவு செய்த நாள்
25 மே2016
07:38
புதுடில்லி : ‘நைட் ஸ்டே’ நிறுவனம், ஒன்று முதல் இரண்டு மில்லியன் டாலர் வரை நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. ‘நைட் ஸ்டே’ நிறுவனம், ‘மொபைல் ஆப்’ மூலம், திட்டமிடல் இன்றி, கடைசி நிமிடத்தில் ஓட்டல் அறையை முன்பதிவு செய்யத் துடிப்பவர்களுக்கான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம், விரிவாக்கத்துக்காகவும், தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தவும், 1.20 கோடி டாலரை திரட்ட முடிவு செய்து உள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி நசர் கான் கூறியதாவது: தற்போது, ஓட்டல் துறையில், 60 சதவீத அறைகள் மட்டுமே புக் ஆகின்றன. எஞ்சிய, 40 சதவீதம் காலியாக உள்ளது. இதைப் பயன்படுத்தி கடைசி நேரத்தில் முன்பதிவு செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியுடன் அறைகளை புக் செய்து தருகிறோம். இருதரப்புக்கும் இதனால் லாபம். தற்போது இன்னும் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|