பதிவு செய்த நாள்
25 மே2016
07:41
மும்பை : பிரதமர் மோடி, அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை, 2014, ஆகஸ்ட், 14ல் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், பஞ்சாபில், ஒரு கூலித் தொழிலாளியின் ஜன் தன் வங்கி கணக்கில், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக, வருமான வரி துறை, அவருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. அப்போதுதான், அந்த கணக்கை, வேறு நபர் முறைகேடாக பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறுகையில்,‘‘வங்கி, ஜன் தன் கணக்கு பரிவர்த்தனைகளை கண்காணிக்க தவறிவிட்டதை, பஞ்சாப் சம்பவம் உணர்த்துகிறது. கணக்கை துவக்கும் போது, வாடிக்கையாளரின், கே.ஒய்.சி., விவரங்களை ஆராயும் வங்கிகள், அதில் நடைபெறும் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|